பிரசித்தி பெற்ற திருப்பதி திருக்குடை ஊர்வலம் சென்னையில் வரும் 2-ம் தேதி நடைபெறுகிறது.
இது தொடர்பாக ஹிந்து தர்மார்த்த ஸமிதியின் நிர்வாக அறங்காவலர்கள் எஸ்.வேதாந்தம், ஆர்.ஆர்.கோபால்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவையின்போது, ஏழுமலையானுக்கு சமர்ப்பிப்பதற்காக தமிழக பக்தர்கள் சார்பில் 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள் ஆண்டுதோறும் சமர்ப்பணம் செய்யப்படுவது வழக்கம் என தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், ஏழுமலையான் கருடசேவைக்கான, வெண்பட்டு திருக்குடை ஊர்வலம் வரும் 2ஆம் தேதி , சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து 10 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்குகிறது என கூறியுள்ளனர். மேலும், சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக செல்லும் திருப்பதி திருக்குடைகளை குடும்பத்துடன் தரிசித்து, ஏழுமலையான் அருள்பெற அனைவரும் வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.