தீபாவளிக்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 முதல் 4 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும் என கூறப்படுகிறது. அதன்படி அறிவிப்பு வெளியானால் 18 ஆயிரம் ரூபாயை அடிப்படை சம்பளமாக கொண்ட தொடக்க நிலை ஊழியருக்கு, 540 ரூபாய் முதல் 720 ரூபாய் வரை ஊதியம் அதிகமாக கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர்களைப் போலவே ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் 3 முதல் சதவீதம் உயர்த்தப்படும் என கூறப்படுகிறது.