சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
திருவல்லிக்கேணி பல்லவன் சாலையை சேர்ந்த பிரகாஷ் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நோ பார்க்கிங் பகுதியில், ஆட்டோவை நிறுத்தி வைத்ததால் ரயில்வே பாதுகாப்பு படையினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் பிரகாஷை பத்திரமாக மீட்டனர்.