ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்ற பத்திரிக்கையை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
சென்னை பெரம்பூரில் கடந்த ஜூலை மாதம் ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், வழக்கு தொடர்பாக 28 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கைதான நபர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்ட போலீசார், வழக்கு தொடர்பாக சுமார் 5 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை, எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த குற்றபத்திரிகையில், ஏ1 குற்றவாளியாக பிரபல ரவுடி நாகேந்திரன், ஏ2 குற்றவாளியாக தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்தில் மற்றும் ஏ3 குற்றவாளியாக ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.