மாற்றுத்திறனாளியை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறி கைது செய்யப்பட்ட மகா விஷ்ணுவுக்கு ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அரசுப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளியை அவமதித்ததாக கூறி ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்னு கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி அவர் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் தான் பேசவில்லை என்றும், தனது முழு பேச்சை கேட்காமல் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக . மகாவிஷ்ணு தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மகாவிஷ்ணுவிற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.