தனிநபர் சுதந்திரத்தில் தலையிட்டு உணர்வுகளை காயப்படுத்தும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு வருத்தமளிப்பதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கோவை ஈஷா மையம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஈஷா மீதான வழக்குகளின் விவரத்தை நாளைக்குள் சமர்ப்பிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார்.
இதுமட்டுமன்றி ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு பிற பெண்களை பிரம்மச்சரியத்தில் ஈடுபடுத்துவதா என எழுப்பப்பட்ட கேள்வி வருத்தமளிப்பதாகவும், இது தனிநபர் தாக்குதலாகவே அமைகிறது என்றும் அறிக்கையில் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.