திருப்பூரின் தியாக தீபம் : கொடி காத்த குமரன் - சிறப்பு கட்டுரை!
Aug 3, 2025, 09:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பூரின் தியாக தீபம் : கொடி காத்த குமரன் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 4, 2024, 11:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடி காத்த குமரன் என்று போற்றப்படும் திருப்பூர் குமரன் பிறந்த நாள் இன்று. மிக இளம் வயதில், சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு, உயிர் நீத்த, திருப்பூர் குமரனின் தேசப் பற்றை நினைவு கூறும் விதமாக ஒரு செய்தி தொகுப்பு.

1904 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் குமரன் பிறந்தார். சராசரி குடும்பத்தில் பிறந்த குமரன், சென்னிமலையில் 5 ஆம் வகுப்பு வரை படித்தார்.

குடும்பத்தின் வறுமை காரணமாக படிப்பை நிறுத்திய குமரன், திருப்பூர் வரை சென்று துணிகளை விற்பனை செய்து வந்தார். பிறகு, பள்ளிப்பாளையத்தில் நெசவுத் தொழிலில் இருந்த தனது தாய் மாமனுக்கு உதவியாக வேலை செய்தார். மேலும், தானே சுயமாக தறியும் நெய்து வந்தார்.

நூல் வாங்கி வந்து, தறியடித்து துணி நெய்து வரும் கூலி வருவாய் குடும்பம் நடத்த போதுமானதாக இல்லை. 1922 ஆம் ஆண்டு தனது 12 வது வயதில், வறுமையுடன் போராடி வந்த குமரன், நெசவுத் தொழிலின் அவல நிலைக் கண்டு வருந்தினார். தாள முடியாத வறுமையால் ,குமரனின் குடும்பம் திருப்பூருக்கு இடம் பெயர்ந்தது. திருப்பூரில் பஞ்சுத் தரகு மண்டியில் எடைக் குறிப்பு எழுத்தராக குமரன் பணியில் சேர்ந்தார்.

இந்தச் சூழலிலும், உண்மையும் நேர்மையும் உழைப்பும் நிறைந்த குமரன் தேசப் பக்தியிலும் ஈடுபாடு காட்டி வந்தார். உள்ளூரில் சுதந்திர போராட்ட விழிப்புணர்வு நாடகங்களை நடத்தி வந்தார். குமரனின் 19 வது வயதில், பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.

1923ஆம் ஆண்டு, 14 வயதுடைய ராமாயி என்பவரை குமரன் திருமணம் செய்து கொண்டார். தனது வாழ்நாளில், 20 முறை தமிழகம் வந்த மகாத்மா காந்தி,அதில் 6 முறை திருப்பூர் நகரத்துக்கு வந்திருக்கிறார். திருப்பூருக்கு காந்தி வந்தபோது, ஒரு சேவா தள தொண்டராக, குல்லாவும் அரைக்கால் ஆடையும் அணிந்து கொண்டு மகாத்மா காந்திக்குப் பாதுகாவலராக குமரன் நின்றார்.அதன் பிறகு குமரன் முழுக்க முழுக்க கதராடை அணிய தொடங்கினார்.

மகாத்மா காந்தியின் கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர் குமரன். இதன் காரணமாக நாட்டின் விடுதலைக்காக மகாத்மா காந்தி அறிவித்த எல்லா போராட்டங்களில் முழு மனதுடன் ஈடுபட்டு வந்தார்.

வட்ட மேஜை மாநாட்டுக்குச் சென்று திரும்பிய பின்னர் , காந்தி அறிவித்த சட்ட மறுப்பு இயக்கம் நாடெங்கும் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. காந்தி கைது செய்யப்பட்டார். பொதுக் கூட்டம் நடத்தவும்,மறியல் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியை சட்ட விரோத கட்சி என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது. அதன் விளைவாக திருப்பூரிலும் வலுக் கட்டாயமாக, காங்கிரஸ் கட்சி கலைக்கப் பட்டது.

இந்நிலையில், ஆங்கிலேய அரசின் தடையை மீறி திருப்பூரில்,ஊர்வலம் நடத்துவது என திருப்பூர் தேசப் பந்து வாலிபர் சங்கம் முடிவு செய்தது.அதன்படி, பி.எஸ்.சுந்தரம் தலைமையில்,குமரன்,பெங்காலி முதலியார்,ராமன் நாயர்,விஸ்வநாத ஐயர்,நாச்சிமுத்து கவுண்டர்,சுப்பராயன்,நாச்சிமுத்து செட்டியார்,அப்புக்குட்டி மற்றும் நாராயணன் என ஒன்பது பேர் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

1932 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி, இன்றைய திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலத்தில் 500க்கும் குறைவான மக்களே கலந்து கொண்டனர். ஊர்வலம் திருப்பூர் வடக்கு காவல்நிலையம் அருகில் சென்ற போது, ஆங்கிலேய காவல் துறையினர் தடியடி நடத்தினர்.

தடியடியால், குமரனின் மண்டை உடைந்தது…. இரத்தம் கொட்ட குமரன் கீழே விழுந்தார். அடிபட்டு கீழே விழுந்த போதிலும், தனது கையில் அவர் வைத்திருந்த தேசியக் கொடியை மண்ணில் விடாமல் உயர்த்திப் பிடித்தார். மறுநாள், மருத்துவமனையில் சுயநினைவின்றி இருந்த குமரன் உயிரிழந்தார். அவரது சடலத்தை ஜம்மானை ஆற்றுக் கரையில் புதைத்தனர்.

குமரன் மறைந்து ஒரு மாதத்துக்குள்,திருப்பூருக்கு வந்த மகாத்மா காந்தி, குமரனின் வீடு தேடி சென்று, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார்.

திருப்பூர் குமரனின்,100 வது பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில், 2004 ஆம் ஆண்டு, இந்திய அரசு சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்டது. தமிழக அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது.

தாய் நாட்டுக்காக, ஆங்கிலேயரின் அடக்குமுறையால் உயிர் துறந்த குமரன், காவலர்களின் தடியடி தலையைப் பிளந்த போதும் தேசியக் கொடியை உயர்த்திப்பிடித்தார். திருப்பூர் குமரனை இன்றும் நாடு கொடி காத்த குமரன் என்று போற்றுகிறது. நெஞ்சை நிமிர்த்தி வீறுநடை போட்ட வரலாற்று நாயகன் திருப்பூர் குமரனின் புகழைப் போற்றுவோம்….

Tags: Thirupur kumaran birth dayKodhi Katha Kumaran.britsh rule
ShareTweetSendShare
Previous Post

சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்!

Next Post

மாநாட்டு பாதுகாப்புக்கு சென்ற பெண் காவலர்களை தாக்கிய விசிக தொண்டர்கள் – ஹெச்.ராஜா கண்டனம்!

Related News

தேஜஸ் MK2 Vs F -35 போர் விமானம் : அமெரிக்க போர் விமானத்தை நிராகரிக்க காரணம் என்ன?

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

ரஷ்யா – அமெரிக்கா இடையே போர்? – சிறப்பு தொகுப்பு!

குரங்கணி அருகே சீமான் போராட்டம் – சுற்றுலா பயணிகள் அவதி!

மிரட்சியில் இந்தியாவின் எதிரிகள் : கடற்படைக்கு வலுசேர்க்கும் Project-18 போர் கப்பல்!

ரசிகர்களை அழ வைத்து சென்ற நகைச்சுவை நடிகர் மதன் பாப் : சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி சாதனை – குவியும் பாராட்டு!

போடி அருகே தடையை மீறி மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற சீமான்!

சுதந்திர போராட்ட வீரர்களை போற்றுவதிலும், பாராட்டுவதிலும் பாஜகவே முதன்மையான கட்சி – நயினார் நாகேந்திரன்

திருமங்கலத்தில் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சிபிஎஸ்இ மண்டல அலுவலர் – போலீஸ் விசாரணை!

விபத்தில் சிக்குபவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள் அலட்சியம் காட்டுகின்றன – ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் குற்றச்சாட்டு!

செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு – வியாபாரிகள் சாலை மறியல்!

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் மீது புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை – பெற்றோர் வேதனை!

ஓபிஎஸ் விலகியது குறித்து தலைமை பதிலளிக்கும் – எல்.முருகன்

கிட்னியை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதே திராவிட மாடல் அரசின் சாதனை – வானதி சீனிவாசன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies