பங்கு சந்தையில் புதிய வரலாறு - 30 நாட்களில் 47 நிறுவனங்கள் IPO வெளியீடு - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 04:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பங்கு சந்தையில் புதிய வரலாறு – 30 நாட்களில் 47 நிறுவனங்கள் IPO வெளியீடு – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 4, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் செப்டம்பரில் சுமார் 47 நிறுவனங்கள், ஐபிஓ வெளியீட்டின் மூலம் 16,152 கோடி ரூபாயை மூலதனமாக திரட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஐபிஓ சந்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய பங்கு சந்தையில் முக்கிய சந்தைகளாக ,மும்பை பங்கு சந்தையும்,தேசிய பங்கு சந்தையும் உள்ளன. 1857ம் ஆண்டு தொடங்கப்பட்ட மும்பை பங்கு சந்தையில் ,சுமார் 5000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பொது வெளியில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த சந்தையின் மதிப்பு, சுமார் 467 லட்சம் கோடி ரூபாயாகும்.

1992 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய பங்கு சந்தையில் சுமார் 2500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன் மதிப்பு, 463 லட்சம் கோடி ரூபாயாகும்.

தேசிய பங்கு சந்தையின் முக்கிய குறியீடாக, நிஃப்டியும், மும்பை பங்கு சந்தையின் குறியீடாக சென்செக்ஸ்ஸும் உள்ளன. மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களைப் பட்டியலிட SME -IPO வசதியும் உள்ளது.

பொதுவாக, IPO எனப்படும் முதன்மை சந்தையில் பட்டியலிட உள்ள நிறுவனங்களின் பங்குகளை வாங்க மட்டுமே முடியும். ஆனால், இரண்டாம் நிலை சந்தையில், பங்குகளை வாங்குவது மற்றும் விற்பது என முழு வணிகமும் நடைபெறும்.

இந்தியாவின் இரண்டாம் நிலை சந்தையில் உற்சாகம் அதிகமாக இருக்கும் அதே வேளையில், முக்கிய குறியீடுகள் இப்போது, நாள்தோறும், புதிய உயரங்களைத் தொடுகின்றன. மேலும், IPO எனப்படும் முதன்மை சந்தைகளும் வேகமாக வளர்ந்து வருகின்றன. கடந்த பத்து வருட காலத்தில், ஒரே ஆண்டில் அதிகபட்ச IPO நிறுவனங்கள் பட்டியலிடுவது இதுவே முதன்முறையாகும்.

நடப்பாண்டில் மட்டும் 252 நிறுவனங்களின் பங்குகள் பொதுவெளிக்கு வந்துள்ளன. இவற்றில் , 229 நிறுவனப் பங்குகள் வெளியான நாளன்றே ஏற்றத்தில் தொடங்கியுள்ளது. மொத்தம் 252 நிறுவனங்கள் சுமார் 70,667 கோடி ரூபாயை முதலீடாக திரட்டிய நிலையில், தற்போது அதன் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பு, 4 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு செப்டம்பர் மாதத்தில் தான் மிக அதிக அளவிலான நிறுவனங்கள் IPO வாயிலாக நிதி திரட்ட வந்துள்ளதாக, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுனர் மைக்கேல் தேபபிரதா தலைமையிலான குழு தெரிவித்துள்ளது.

பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பரில் பன்மடங்கு அதிகரித்துள்ள நிலையில், நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில்,உலக அளவில் அதிக எண்ணிக்கையில் IPO வெளியிட்ட நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.

இரண்டாம் நிலை சந்தையில் அறிமுகமான, 47 நிறுவனங்கள் கூட்டாக ₹16,152 கோடி ரூபாய் திரட்டியதில் பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் தான் அதிகபட்சமாக 6,560 கோடி ரூபாய் மதிப்பிலான IPOயை வெளியிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பிரீமியர் எனர்ஜிஸ் 2,830.4 கோடி ரூபாய் மதிப்பிலான IPOயை வெளியிட்டுள்ளது. ஏனைய 34 நிறுவனங்களும் SME வகை நிறுவனங்களாகும்.

செப்டம்பரில் பட்டியலிடப்பட்ட 47 நிறுவனங்களில் கிட்டத்தட்ட 61 சதவீதம், அவற்றின் வெளியீட்டு விலையை விடவும் அதிகமான விலைக்கு வர்த்தகம் ஆகின்றன.

குறிப்பாக SME பிரிவில் உள்ள பங்குகள் கிட்டத்தட்ட 100 சதவீதத்துக்கும் அதிகமான பட்டியலிடுவதால் முதலீட்டாளர்கள் அதிகளவில், SME பிரிவில்ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். SME ஐபிஓவான WOL 3D-ன் சில்லறை விற்பனைப் பகுதி 488 மடங்கு விற்பனையாகி உள்ளது. மேலும், கடந்த மாதம் பட்டியலிடப்பட்ட 34 SME ஐபிஓக்களில், 16 ஐபிஓக்கள் எதிர்பாராத வணிகத்தைச் செய்துள்ளன.

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ், ஓலா எலக்ட்ரிக் மற்றும் பிரீமியர் எனர்ஜிஸ் போலவே, ஹூண்டாய் மோட்டார், ஸ்விக்கி, நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச், வாரீ எனர்ஜிஸ், மொபிக்விக், என்டிபிசி கிரீன், LIC உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த ஆண்டு IPO-வில் பெருமளவில் வெற்றி காண இருக்கின்றன.

கொரொனா நோய்தொற்றுக் காலத்துக்குப் பின், டீ மேட் கணக்குகளின் எண்ணிக்கையும், பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது. மேலும், இந்திய பங்கு சந்தையில் ஈடுபடும் சிறு முதலீட்டாளர்களின் வரவும் அதிகரித்துள்ளது. கடந்த 5 வருடங்களாக, பங்கு சந்தையில் முதன்மை சந்தையான IPO வெளியீட்டில் ஆர்வம் காட்டும் சிறு மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

இதற்கு, இந்திய பங்கு சந்தை பெரிய அளவிலான இறக்கத்தை காணவில்லை என்பது முக்கிய காரணமாகும். பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் வளர்ந்துள்ளது எனபதற்கு இதுவே சான்றாகும். விரைவில் உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்பதற்கும் இதுவே அத்தாட்சி ஆகும்.

Tags: National Stock ExchangeIndia's IPO marketIPO issueMumbai Stock Exchange
ShareTweetSendShare
Previous Post

விசிக தலைவர் திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் – அஸ்வத்தாமன் வலியுறுத்தல்!

Next Post

அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை : வள்ளலார் காட்டிய தனி வழி – சிறப்பு கட்டுரை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies