சனாதன தர்மத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள் என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியதற்கு, பொறுத்திருந்து பார்ப்போம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
திருப்பதியில் தரிசனம் மேற்கொண்ட ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பொதுக்கூட்டத்தில் பேசியபோது சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் தான் அழிந்து போவார்கள் என தெரிவித்தார்.
இந்நிலையில், பவன் கல்யாண் கூறியது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, யாரை கூறுகிறார் என்று தெரியவில்லையே என பதிலளித்த அவர், பொறுத்திருந்து பார்ப்போம் எனக்கூறிவிட்டு காரில் புறப்பட்டார்.