காங்கிரஸ் தலைவர்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும்போது, அக்கட்சியால் எப்படி அவற்றை ஒழிக்க முடியும் என மத்திய அமைச்சர் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.
குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் 27 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
டெல்லியில் 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் துஷார் கோயல் கைது செய்யப்பட்டதை மேற்கோள்காட்டிய மத்திய அமைச்சர் அமித் ஷா, அக்கட்சியினரால் எப்படி போதைப்பொருள் இல்லாத தேசத்தை உருவாக்க முடியும் என கேள்வி எழுப்பினார்.