நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வடமாநில கொள்ளையர்களால் தாக்கப்பட்டு காயமடைந்த காவல் ஆய்வாளர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை வெப்படை அருகே போலீசார் சுட்டுப்பிடிக்க முயன்றனர். அப்போது காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் மீது கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல் நடத்தினர்.
இதில் காயமடைந்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர்களுக்கு எஸ்.பி.ராஜேஷ்கண்ணன், டி.எஸ்.பி.இமயவரம்பன் உள்ளிட்டோர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.