இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தலைவர் ஹஷேம் சஃபிதீன் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். இதனையடுத்து அந்த அமைப்பின் துணை தலைவரான ஹஷேம் சஃபிதீன் ஹிஸ்புல்லா அமைப்புக்கு தலைமை வகிப்பவர்களில் முக்கிய நபராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் பெய்ரூட் நகரில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். அப்போது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹஷேம் சஃபிதீன் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில், ஹிஸ்புல்லா அமைப்புக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என தெரியவந்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக செயல்படும் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.