தேசிய விருதுகள் பட்டியலில் குழந்தை படங்களுக்கான பிரிவு இல்லை என்பது வருத்தமளிப்பதாக இயக்குநர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லஷ்மிநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில் குரங்கு பெடல் திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது.
இதற்கான விருதை படத்தின் இயக்குநர் கமலக்கண்ணன் பெற்றதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் குழந்தைகளுக்கான படத்தை விருதுகள் வழங்குவதில் இருந்து புறக்கணிப்பது இயக்குநர்களை வருத்தமடைய செய்வதாகத் தெரிவித்தார்.