திருப்பதி ஏழுமலையான் கோயில் 2-ஆம் நாள் பிரமோற்சவ விழாவையொட்டி, மலையப்ப சுவாமியின் சின்னசேஷ வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.
ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் அக்டோபர் 12-ஆம் தேதி வரை விழா நடைபெற உள்ளது.
இந்நிலையில், விழாவின் 2-ஆவது நாளையொட்டி, சின்ன சேஷ வாகன புறப்பாடு, கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பினர். மேலும், மலையப்ப சுவாமியை மனமுருக வழிபட்டனர்.