மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக தொடரப்பட்ட வழக்கில் மத்திய ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனரகம், தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம், ஜல்ஜீவன் திட்டங்களில் பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இதுபோன்ற திட்டங்களை வைத்து ஊராட்சி தலைவர்கள் கொள்ளையடிப்பதையும், ஊழல் செய்வதையுமே நோக்கமாக கொண்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மத்திய ஊழல் தடுப்பு பிரிவு இயக்குனரகம், தமிழக ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில், வழக்கு தொடர்ந்த கோபிநாத், தமிழகம் முழுவதும் 100 நாள் வேலை திட்டம் மற்றும் ஜல்ஜீவன் திட்டங்களில் ஊழல்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும் இது குறித்து புகாரளித்தால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.