முடங்கும் எண்ணெய் வர்த்தகம்? ஹோர்முஸ் ஜலசந்தியை குறிவைக்கும் ஈரான் - சிறப்பு கட்டுரை!
Aug 22, 2025, 10:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முடங்கும் எண்ணெய் வர்த்தகம்? ஹோர்முஸ் ஜலசந்தியை குறிவைக்கும் ஈரான் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 6, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்குப் பின் மத்திய கிழக்கில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவிற்கு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சர்வதேச அளவில்,எண்ணெய் விலைக்கு கச்சா எண்ணெய் தான் அளவுகோலாக உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப் பட்ட போது, சர்வதேச சந்தையில்,கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் அதிகமானது.

கடந்த மாதம் 70 அமெரிக்க டாலராக இருந்த ஒரு பேரலின் விலை,5 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து 74.40 அமெரிக்க டாலராக விற்கப்படுகிறது.

ஈரானின் தாக்குதலுக்கு எப்படி இஸ்ரேல் பதிலடி கொடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்து, கச்சா எண்ணெய்யின் விலையில்,பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஈரானின் அணுஆயுத நிலையங்களை இஸ்ரேல் தாக்கலாம் என்று கூறப்படும் நிலையில், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலில் மற்ற நாடுகள் இணையும் போது , கச்சா எண்ணெய் விலையில் மேலும் எதிர்பாராத மாற்றங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக,ஈரானின் அணுசக்தி மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புக்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், எண்ணெய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சரக்கு வர்த்தகத்தில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை கடல் வழியாக நடக்கிறது. எனவே, கடல்சார் வர்த்தகத்தில் ஏற்படும் எந்த இடையூறும் சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். உலகளவில் எண்ணெய் வர்த்தகத்துக்கான முக்கியமான வழியாக ஹோர்முஸ் ஜலசந்தி உள்ளது.

சவூதி அரேபியா, ஈராக், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் இருந்து இந்த ஜலசந்தி வழியாக ஒரு நாளைக்கு 20 மில்லியன் பேரல்கள் ஏற்றுமதியாகிறது பாய்கிறது.

தனக்கு மிக அருகில் இருக்கும் இந்த ஹோர்முஸ் ஜலசந்தி பாதையை ஈரான் கையகப்படுத்தும் வாய்ப்பு அதிகம். அப்படி ஈரான் இந்த ஜலசந்தியைத் தாக்கினால், உலக அளவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் .

ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளாகவே, செங்கடலில் ஹெளதி தீவிரவாதிகள் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால்,மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் செங்கடலில் இருந்து ஏடன் வளைகுடா வரை பரவியுள்ளன.

இதன் காரணமாக,வர்த்தகப் பாதைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் தள்ளப்படலாம் என்றும், போக்குவரத்து நேரங்களும் அதிகரிக்கலாம் என்றும், அதன் விளைவாக, உற்பத்தி தாமதங்கள் மற்றும் அதிக பணவீக்கம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்து இருப்பதால் இந்தியாவிலும்,பாதிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 692 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது 2025 நிதியாண்டில் மேலும் 10 மாதங்களுக்கும் மேலாக திட்டமிடப்பட்ட இறக்குமதிகளை ஈடுகட்ட போதுமானது.

இருந்தாலும், முழுமையான புவிசார் அரசியல் நெருக்கடி இந்திய பங்குச் சந்தையில் மிகப் பெரிய மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்தும்என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Irancrude oil pricesMiddle East.international marketIsraelLebanon
ShareTweetSendShare
Previous Post

இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

Next Post

ராணுவ பாதுகாப்பில் கூட்டு, இந்தியாவில் ஆலை அமைக்கும் பிரான்சின் சஃப்ரான் நிறுவனம் – சிறப்பு கட்டுரை!

Related News

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

ஆத்தூர் அருகே கோயில் நிலம் ஆக்கிரமிப்பு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு ஆதாரை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

நெய்வேலி திரையரங்கில் கேப்டன் பிரபாகரன் படம் பார்த்த பிரேமலதா விஜயகாந்த்!

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி – சீனாவின் எந்த பகுதியையும் இந்தியா இனி தாக்கலாம்!

பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை – உச்ச நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவில் மிகப்பெரிய ஊழல் கட்சி திமுக – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற பாஜகவினர் சபதம் ஏற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கூவத்தூர் அனிருத் இசை நிகழ்ச்சி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையின் பிரதான சாலைகளில் மழைநீர் தேக்கம் – வாகன ஓட்டிகள் அவதி!

தமிழக வெற்றி கழகம் 3 சதவீத வாக்குகள் மட்டுமே பெறும் – அர்ஜுன் சம்பத்

அம்பாசமுத்திரம் அருகே தெரு நாய் கடித்ததில் 2-ம் வகுப்பு மாணவி படுகாயம்!

கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டு – அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல்!

2 லிட்டர் வாங்கினால் ஒரு லிட்டர் இலவசம் – பொன்னமராவதி அருகே பெட்ரோல் நிலையத்தில் குவிந்த வாகனங்கள்!

காது, மூக்கில் நகை இருந்தால் ரூ.1000 கிடையாது – அமைச்சரின் பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சட்டப்பேரவையில் ஆர்எஸ்எஸ் பாடலை பாடிய துணை முதல்வர் – மேசையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய உறுப்பினர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies