முடங்கும் எண்ணெய் வர்த்தகம்? ஹோர்முஸ் ஜலசந்தியை குறிவைக்கும் ஈரான் - சிறப்பு கட்டுரை!
Sep 18, 2026, 05:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முடங்கும் எண்ணெய் வர்த்தகம்? ஹோர்முஸ் ஜலசந்தியை குறிவைக்கும் ஈரான் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 6, 2024, 09:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணை தாக்குதலுக்குப் பின் மத்திய கிழக்கில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் நேரடி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவிற்கு எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும். இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சர்வதேச அளவில்,எண்ணெய் விலைக்கு கச்சா எண்ணெய் தான் அளவுகோலாக உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப் பட்ட போது, சர்வதேச சந்தையில்,கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் அதிகமானது.

கடந்த மாதம் 70 அமெரிக்க டாலராக இருந்த ஒரு பேரலின் விலை,5 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்து 74.40 அமெரிக்க டாலராக விற்கப்படுகிறது.

ஈரானின் தாக்குதலுக்கு எப்படி இஸ்ரேல் பதிலடி கொடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்து, கச்சா எண்ணெய்யின் விலையில்,பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ஈரானின் அணுஆயுத நிலையங்களை இஸ்ரேல் தாக்கலாம் என்று கூறப்படும் நிலையில், ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலில் மற்ற நாடுகள் இணையும் போது , கச்சா எண்ணெய் விலையில் மேலும் எதிர்பாராத மாற்றங்கள் வரலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக,ஈரானின் அணுசக்தி மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புக்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், எண்ணெய் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சரக்கு வர்த்தகத்தில் 80 சதவீதத்துக்கும் அதிகமானவை கடல் வழியாக நடக்கிறது. எனவே, கடல்சார் வர்த்தகத்தில் ஏற்படும் எந்த இடையூறும் சர்வதேச பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். உலகளவில் எண்ணெய் வர்த்தகத்துக்கான முக்கியமான வழியாக ஹோர்முஸ் ஜலசந்தி உள்ளது.

சவூதி அரேபியா, ஈராக், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் இருந்து இந்த ஜலசந்தி வழியாக ஒரு நாளைக்கு 20 மில்லியன் பேரல்கள் ஏற்றுமதியாகிறது பாய்கிறது.

தனக்கு மிக அருகில் இருக்கும் இந்த ஹோர்முஸ் ஜலசந்தி பாதையை ஈரான் கையகப்படுத்தும் வாய்ப்பு அதிகம். அப்படி ஈரான் இந்த ஜலசந்தியைத் தாக்கினால், உலக அளவில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் .

ஏற்கெனவே கடந்த சில ஆண்டுகளாகவே, செங்கடலில் ஹெளதி தீவிரவாதிகள் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால்,மத்திய கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் பதற்றம் செங்கடலில் இருந்து ஏடன் வளைகுடா வரை பரவியுள்ளன.

இதன் காரணமாக,வர்த்தகப் பாதைகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உலக நாடுகள் தள்ளப்படலாம் என்றும், போக்குவரத்து நேரங்களும் அதிகரிக்கலாம் என்றும், அதன் விளைவாக, உற்பத்தி தாமதங்கள் மற்றும் அதிக பணவீக்கம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியை சார்ந்து இருப்பதால் இந்தியாவிலும்,பாதிப்பு ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 692 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. இது 2025 நிதியாண்டில் மேலும் 10 மாதங்களுக்கும் மேலாக திட்டமிடப்பட்ட இறக்குமதிகளை ஈடுகட்ட போதுமானது.

இருந்தாலும், முழுமையான புவிசார் அரசியல் நெருக்கடி இந்திய பங்குச் சந்தையில் மிகப் பெரிய மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்தும்என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Middle East.international marketIsraelLebanonIrancrude oil prices
Share
Tweet
SendShare
Previous Post

இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

Next Post

ராணுவ பாதுகாப்பில் கூட்டு, இந்தியாவில் ஆலை அமைக்கும் பிரான்சின் சஃப்ரான் நிறுவனம் – சிறப்பு கட்டுரை!

Related News

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவைக்கு பாராட்டு – சென்னையில் ஆசீர்வாத தீபம் ஏற்றும் விழா!

பாரத பிரதமர் மோடியின் 76-வது பிறந்த நாள் : நாடு முழுவதும் ஆசீர்வாத தீபம் ஏற்றம்!

உலக அரங்கில் பிரதமர் மோடி பெரும் செல்வாக்கு பெற்றுள்ளார் – ரஷ்ய அதிபர் புதின் புகழாரம்!

பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் – தலைவர்கள் வாழ்த்து!

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

Load More

அண்மைச் செய்திகள்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies