சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் ஆகாஷ் கங்கா பாராசூட் குழு மெய்சிலிர்க்கச் செய்யும் வகையில் சாதனைகளை செய்தது.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் வேற்றுமையில் ஒற்றுமையை பிரதிபலிக்கும் வகையில் ஆகாஷ் கங்கா பாராசூட் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆகாஷ் கங்கா பாராசூட் குழு இந்திய விமானப்படையின் குழுக்களில் முதன்மையானது ஆகும். இந்நிலையில் மெரினாவில் தேசியக் கொடி நிறத்திலான பாராசூட்டில், விங் கமாண்டர் ஏ.கே.யாதவ் தலைமையிலான வீரர்கள் பறந்தனர்.
இதனை மெரினாவில் குவிந்திருந்த லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். ரஃபேல் போர் விமானமும் வானில் சாகசம் செய்து கண்களைக் கவர்ந்தது.