புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் அரங்கேறிய கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.
கண்டியாநத்தம் புதுப்பட்டி பகுதியில் ராஜா, குகன், குமரப்பன் ஆகியோரது வீடுகள் உள்ளன. இந்நிலையில் 3 பேரின் வீடுகளிலும் யாரும் இல்லாத நிலையில் மின்விளக்குகள் மட்டும் எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர், 3 பேருக்கும் தகவலளித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த 3 பேரும், தங்களது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீடுகளில் இருந்த 23 சவரன் தங்க நகை, ரொக்கப் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் காணாமல் போயிருப்பதைக் கண்டனர்.
இதுகுறித்து 3 பேரும் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.