தேனி மாவட்டம் உத்தம்பாளையத்தில் உள்ள இரு கால்வாய்களில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதனால் பி.டி.ராசன் மற்றும் பெரியார் கால்வாய்களில் இருந்து வினாடிக்கு 100 கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா இரு கால்வாய்களில் இருந்தும் தண்ணீரை திறந்து வைத்தார். இதன்மூலம் 5 ஆயிரத்து 146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.