மற்ற மாநிலங்களைப் போல மதக் கலவரம் இல்லாமல் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள நெடுங்குடி கைலாசநாதர் கோவில் வளாகத்தில், 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமையல் கூடம் மற்றும் உணவு அருந்தும் கூடத்தை முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், சமுதாயத்தில் நல்லிணக்கத்தோடு இருக்க வேண்டும் அதுதான் காந்தியடிகள் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம் என தெரிவித்தார்.