தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக சேலத்தில் போதை ஊசி மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆனந்தா பாலம் பகுதியில் மாநகராட்சி அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைந்துள்ளது. இன்னும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாத இந்த கட்டிடத்தில், சிலர் போதைப் பொருட்களை உபயோகித்து, வினியோகித்தும் வந்துள்ளனர்.
இதனால் எங்கு பார்த்தாலும், போதை ஊசிகள், மாதிரைகள் குவிந்து காணப்படுகின்றன. இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதையடுத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தீபக், தனசேகர் ஆகியோரைஇருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.