சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி 3-வது முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கிய உச்சநீதிமன்றம், வாரம் இருமுறை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக கையெழுத்திடுமாறு உத்தரவிட்டது.
அந்தவகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி 3-வது முறையாக ஆஜராகி கையெழுத்திட்டார்.