தென்காசியில் சாலையில் நடந்து சென்ற நபரை பாய்ந்து கடிக்க முற்பட்ட தெரு நாயின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நாள்தோறும் தெரு நாய்களின் கடிப்பதால் ஏராளமானோர் பாதிப்பிற்குள்ளாகி வரும் நிலையில், கடையநல்லூர் நகர் பகுதியில் உள்ள நகைக்கடை பஜாரில் நகை வாங்கச் சென்ற நபர் மீது பாய்ந்த தெரு நாய் ஒன்று அவரை கடிக்க முற்பட்டது.
சுதாரித்துக்கொண்ட அவர் நாயை துரத்திய நிலையில் அவர் காயமின்றி தப்பினார். இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.