புதுக்கோட்டையில் கதண்டு கடித்து பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர்களை கதண்டு கடிக்கத் தொடங்கியது. மாணவர்களை காப்பாற்ற முயன்றவர்களையும் கதண்டுகள் தாக்கியதில், மொத்தம் 8 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கதண்டு கூடு கட்டியுள்ள இடத்தை கண்டறிந்து அழிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.