இஸ்ரேலின் முக்கிய நோக்கங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும் என, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் நடத்திய தாக்குதலின் முதலாமாண்டு நிறைவு தினத்தை குறிக்கும் வகையில் நடைபெற்ற சிறப்பு இரங்கல் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பங்கேற்று பேசினார்.
அப்போது, ஹமாஸை ஒழித்துக் கட்டுவது, காசாவின் அச்சுறுத்தலை முறியடிப்பது, ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற மக்களை மீட்பது என இஸ்ரேல் நிர்ணயித்த அனைத்து இலக்குகளையும் அடைந்த பிறகே போர் முடிவுக்கு வரும் எனக் கூறினார். இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஈரானுடன் எதிர்தாக்குதல் நடத்துவது அவசியம் என்றும் பிரதமர் நெதன்யாகு தெரிவித்தார்.