குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவில் அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருச்செந்தூர் அருகேயுள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.
அந்த வகையில் 5ம் நாள் நிகழ்வில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணன் திருக்கோலத்தில் எழுந்தருளி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.