காஞ்சிபுரம் அருகே சாம்சங் தொழிலாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட நிலையில், போராட்ட பந்தல்களையும் காவல்துறையினர் அகற்றினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்கள் CITU தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டபடாததால் போராட்டம் தொடர்ந்தது. இந்த நிலையில், இரவு நேரத்தில் உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்களின் வீடுகளுக்கு சென்று 10-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.