லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா மற்றும் முக்கிய கமாண்டர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே தொடர் தாக்குதலில், அப்பாவி பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய ஹமாஸ் அமைப்பு மீது உக்கிரமான போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் இருப்பிடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியதில், அந்த அமைப்பின் புதிய தலைவர் நஸ்ரல்லா மற்றும் மூத்த தளபதி சுஹைல் ஹுசைனி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே தெற்கு லெபனானில் தரைவழி தாக்குதலை விரிவுபடுத்த இஸ்ரேல் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால், காசாவில் உள்ள ஒரே மருத்துவமனையான கமல் அத்வான் மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் 24 மணி நேரத்தில் வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில்,
லெபனானின் வீழ்ச்சிக்கு கொடுங்கோலர்கள் மற்றும் பயங்கரவாதி கும்பல் தான் காரணம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.