ரவுடிகளை உருவாக்க ஏன் கல்லூரி நடத்த வேண்டும் என உயிரிழந்த மாணவரின் சகோதரி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டதில் படுகாயமடைந்த மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மாணவரின் சகோதரி அளித்த பேட்டியில், அடிதடியில் ஈடுபடுபவர்களையும், ரவுடிகளையும் உருவாக்க ஏன் கல்லூரியை நடத்த வேண்டும் என்றும், பச்சையப்பன் கல்லூரியையும், மாநில கல்லூரியையும் இழுத்து மூடுமாறும் கூறியுள்ளார்.