நிகழாண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசை நிறுவிய ஆல்ஃபிரட் நோபலின் ஆராய்ச்சியில் வேதியியல் முக்கிய பங்கு வகித்தது. அந்த வகையில் வேதியியலுக்கான நோபல் பரிசு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நிகழாண்டு வேதியியல் பிரிவில் டேவிட் பேக்கர், டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகிய 3 பேருக்கு கூட்டாக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பேக்கர், கணக்கீட்டு புரத வடிவமைப்புக்காக நோபல் பரிசுக்குத் தேர்வாகியுள்ளார்.
இதேபோல, புரத அமைப்பைத் துல்லியமாக கண்டறிந்த பிரிட்டனின் டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்ப்பர் ஆகியோருக்கும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. டிசம்பர் 10-ஆம் தேதி ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.