கடும் பொருளாதார நெருக்கடி : இந்தியாவிடம் சரணடைந்த மாலத்தீவு - சிறப்பு கட்டுரை!
Oct 23, 2025, 09:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடும் பொருளாதார நெருக்கடி : இந்தியாவிடம் சரணடைந்த மாலத்தீவு – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 10, 2024, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் மாலத்தீவுக்கு 3000 கோடி ரூபாய்க்கும் மேல் நிதி வழங்க இந்தியா ஒப்புக் கொண்டிருக்கிறது. இது, புவிசார் அரசியலில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் ராஜ தந்திரமாக பார்க்கப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

மாலத்தீவில் கடந்த நவம்பர் மாதம், அதிபர் பதவிக்கு போட்டியிடும் போது,‘இந்தியா அவுட்’ பிரச்சாரத்தை முகமது முய்சு முன்வைத்தே தேர்தலைச் சந்தித்தார். கடந்த டிசம்பரில், மனிதாபிமான காரணங்களுக்காக மாலத்தீவில் நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியப் படைகளை திருப்பி அனுப்ப வைத்தார்.

கடந்த ஜனவரியில், இந்தியாவின் தெற்குத் தீவுகளான லட்சத்தீவுகளுக்குப் பிரதமர் மோடி சென்ற நிலையில், முகமது முய்சுவின் அமைச்சர்கள் மரியம் ஷியூனா, மல்ஷா ஷரீப் மற்றும் மஹ்சூம் மஜித் ஆகியோர் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் எதிராக கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் வைத்தனர்.

இதற்குப் பதிலடியாக, மாலத்தீவைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் இந்தியர்கள் கோரிக்கை வைத்தனர். இதன் விளைவாக, மாலத்தீவின் சுற்றுலாத்துறை 150 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பெரும் இழப்பை சந்தித்தது.

கடந்த பிப்ரவரி மாதம், மாலத்தீவில் சீனாவின் ஆராய்ச்சிக் கப்பல் நங்கூரமிட அதிபர் முகமது முய்சு அரசு அனுமதி வழங்கியது. இப்படி, இந்தியாவுக்கு எதிராகவே செயல்பட்டு வந்த முகமது முய்சு மீண்டும் மாலத்தீவின் அதிபராக வெற்றிபெற்றார்.

மாலத்தீவில் அதிபராகும் தலைவர்கள், அதிபரானதும் அரசுமுறை பயணமாக இந்தியாவுக்கு வரும் பாரம்பரியத்தை அதிபர் முகமது முய்சு மீறினார். கூடுதலாக, மாலத் தீவின் அதிபரானதும் துருக்கிக்கும் சீனாவுக்கும் முகமது முய்சு பயணம் மேற்கொண்டார்.

இந்தச் சூழலில்,மாலத் தீவு, வெறும் ஒன்றரை மாதத்துக்கு மட்டுமே போதுமான அளவில் அந்நிய செலாவணி கையிருப்பை வைத்திருக்கிறது. 440 மில்லியன் அமெரிக்க டாலராக அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததும், பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது மாலத்தீவு.

இந்தியாவின் பொருளாதாரத்தின் சக்தியையும், இந்திய நடுத்தர வர்க்கத்தின் செல்வாக்கையும் குறைத்து மதிப்பிட்டதன் விளைவுகளை மாலத்தீவு நன்கு உணர்ந்து விட்டது. அதனால் தான், நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்யவும், இந்தியாவுடனான ஒத்துழைப்பு தேவை என்பதால், அதிபர் முகமது முய்சு இந்தியா வந்திருக்கிறார்.

பிரதமர் மோடியுடன் கரன்சி பரிமாற்றத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு. இந்தியா வழங்கியிருக்கும் நிதி உதவி, மாலத்தீவின் அந்நிய செலாவணி தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் மாலத்தீவின் ஊழல் தடுப்பு ஆணையம் இடையே ஒப்பந்தமும், மாலத் தீவு நீதித்துறை அதிகாரிகளுக்கான பயற்சி அளிக்க, இந்திய நீதித்துறை சேவைகள் ஆணையத்துடன் ஒரு ஒப்பந்தமும்,இந்தியாவின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்துடன் ஒரு ஒப்பந்தமும், நாணய மாற்று ஒப்பந்தமும்,இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளன.

மாலத்தீவின் கடலோரக் காவல் படை கப்பல் ஹூரவீயை இலவசமாக சீரமைக்க இந்திய அரசு உறுதி அளித்திருக்கிறது.

மாலத்தீவு மக்களுடன் உறுதியுடனும் இருப்பதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த மாலத்தீவின் எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் தலைவர் அப்துல்லா ஷாஹித், இருநாடுகளுக்கும் இடையேயான பழமையான உறவுகள் புத்துயிர் பெறுவதை கண்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.

வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்திய பொருளாதாரம் உயர்ந்து வருகிறது என்பதால், இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக உறவை ஏற்படுத்திக் கொள்வதே நல்லது என்பதை பிற அண்டை நாடுகளும் முடிவுக்கு உணர வேண்டிய தருணமாக, மாலத்தீவு அதிபரின் இந்திய பயணம் அமைந்திருப்பதாக புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: IndiaMaldiveseconomic crisis3000 crore rupees to Maldives
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்! – பாலச்சந்திரன்

Next Post

2-ஆவது முறையாக ஹரியானா முதல்வர் : யார் இந்த நயாப் சிங் சைனி – சிறப்பு கட்டுரை!

Related News

சென்னையில் கொட்டித் தீர்த்த மழை – சாலையில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்டா மாவட்ட வளர்ச்சிக்கு முதல்வர் என்ன செய்தார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

வீடுகளுக்குள் புகுந்த கழிவு நீர் – பொதுமக்கள் சாலை மறியல்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் நிவாரணம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுக்கோட்டையில் முழு கொள்ளவை எட்டிய அடப்பன்குளம் – நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி!

சிதம்பரம், குறிஞ்சிப்பாடியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்!

தமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கிய மழை – அரூரில் அதிக அளவாக 176 மி.மீ பதிவு!

சிதம்பரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து தாய், மகள் பலி!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியர்களை அடிமைகளாக்கும் கஃபாலா : சவுதி அரேபியா ரத்து செய்தது ஏன்?

தீபாவளி வாழ்த்து சொன்ன ட்ரம்ப் : பயங்கரவாதத்தை அனுமதிக்க மாட்டோம் என மோடி பதில்!

அமெரிக்காவுடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகிறது : இந்தியா மீதான வரி 16 சதவீதமாக குறைய வாய்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies