உடல்நலக்குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்.
86 வயதான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் நேற்று மும்பையில் உள்ள பிரிட்ஸ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
இந்நிலையில் ரத்தன் டாடா மறைவை உறுதிப்படுத்தி டாடா குழுமம் அறிக்கை வெளியிட்டது. அதில் டாடா சன்ஸ்-இன் தற்போதைய தலைவர் நடராஜன் சந்திரசேகரன், ரத்தன் டாடா ‘உண்மையிலேயே அசாதாரணமான தலைவர் என்று கூறியிருக்கிறார்.
மேலும், ஒட்டுமொத்த டாடா குடும்பத்தின் சார்பாக, அவரது அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் மிகவும் ஆர்வத்துடன் போராடிய கொள்கைகளை நிலைநிறுத்த பாடுபடும்போது, அவரது மரபு தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே ரத்தன் டாடாவின் உடல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை தெற்கு மும்பையில் உள்ள The National Centre for Performing Arts பகுதியில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும் என அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.