சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் பாலாறு என்ற பெயரில் நடைபெற்ற சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவடைந்ததாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 3-வது வழித்தடமாக சென்னை சேத்துப்பட்டு முதல் ஸ்டெர்லிங் சாலை வரையிலான சுரங்கம் தோண்டும் பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்றது எனவும், பாலாறு எனப்பெயரிடப்பட்ட இந்த பணிகள் வெற்றிகரமாக ஸ்டெர்லிங் சாலையை வந்தடைந்தது எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமலும், குடியிருப்புகளுக்கு கீழ் எந்த சேதமும் இல்லாமலும் சுரங்கபணிகள் நடைபெற்றது வேலைகளின் துல்லியத்தை எடுத்துக்காட்டுகிறது எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.