கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தென்னை மரம் வெட்டும் பணியின்போது மரம் விழுந்ததில் கூலி தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சீரங்குப்பம் பகுதியை சேர்ந்த சேட்டு, குமார் ஆகியோர், திருவதிகை சக்கரபாணி நகரில் தென்னை மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மரம் விழுந்ததில் சேட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த குமார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.