ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை ஒட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
ஆயுத பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், கும்போணம் மலர் சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையான செண்டிப்பூ, தற்போது 90 ரூபாய்க்கும், கிலோ 80 ரூபாய்க்கு விற்பனையான செவ்வந்திப்பூ தற்போது 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதேபோல் புதுக்கோட்டை மலர் சந்தையிலும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அங்கு மல்லிகைப்பூ கிலோ ஆயிரத்து 500 ரூபாய்க்கும், கனகாம்பரம் ஆயிரம் ரூபாய்க்கும், முல்லைப்பூ கிலோ 900 ரூபாய்க்கும், ஜாதிமல்லி 900 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.