தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், நாட்டின் வளர்ச்சி பயணத்தில் ரத்தன் டாடாவின் பங்களிப்பை மறக்க முடியாதது என்றும்,
தொழில்துறையின் முக்கியமான பகுதிகளில் சிறந்த தரநிலைகளை அவர் நிறுவியதாகவும் கூறியுள்ளார். தேசிய ஒற்றுமையிலும், தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களின் நலனிலும் ரத்தன் டாடா தனித்துவமான சிந்தனை கொண்டவராக விளங்கியதாக கூறிய மோகன் பகவத், பல உயரங்களை எட்டினாலும் அவரது எளிமையும் பணிவும் பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்வதாக புகழாரம் சூட்டினார்.
ரத்தன் டாடாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் இரங்கல் குறிப்பில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் குறிப்பிட்டுள்ளார்.