மும்பையில் தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவையொட்டி, சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது.
மும்பை ஓர்லியில் ரத்தன் டாடாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மற்றும் பெளத்த மத தலைவர்கள் இணைந்து அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர், சர்வமத பிரார்த்தனை நடைபெற்றது.
முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே ஆகியோர் ரத்தன் டாடா உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இதேபோல ஆதித்யா பிர்லா குழும தலைவர் குமார மங்கலம் பிர்லா, ரத்தன் டாடா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரபுல் படேல் ஆகியோரும் ரத்தன் டாடா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, ரத்தன் டாடா மறைவையொட்டி, ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார்.
முன்னதாக தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஜெர்மனியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியின்போது பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசஞ்ச் மேடையிலேயே அஞ்சலி செலுத்தினார்.