இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையால், ஆசியான் உறுப்பு நாடுகளுடன் வலுவான நட்பு கடைப்பிடிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
லாவோஸ் நாட்டின் வியன்டியன் நகரில் நடைபெற்ற 21-ஆவது இந்தியா- ஆசியான் உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ஆசியான் நாடுகளின் முக்கியத்துவம் கருதி, கடந்த 1991-ஆம் ஆண்டிலேயே இந்திய- பசிபிக் பெருங்கடல் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியதை மேற்கோள்காட்டினார்.
கடந்த 10 ஆண்டுகளில் ஆசியான் நாடுகள் உடனான இந்தியாவின் வர்த்தகம் 130 பில்லியன் டாலர் என இரட்டிப்பானதாக கூறிய பிரதமர் மோடி, இன்றைக்கு 7 ஆசியான் நாடுகளுடன் இந்தியா நேரடி விமான சேவையை மேற்கொள்வதாகவும், விரைவில் புரூணேவுக்கு விமான சேவை தொடங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
21-ஆம் நூற்றாண்டில் இந்தியா- ஆசியான் நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.