தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர்,
தமிழகத்தில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் 13 மற்றும் 14 -ம் தேதிகளில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார். நாளை திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என கூறினார்.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் கனமழை பெய்துள்ளது என்றும் தெரிவித்தார்.