மும்பையில் ரத்தன் டாடா உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைவால் உயிரிழந்த ரத்தன் டாடாவின் உடல் மும்பை வோர்லியில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மத்திய அமைச்சர்கள், தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், ரத்தன் டாடாவின் செல்ல பிராணியான கோவா என்ற நாய், அவரது உடலுக்கு மரியாதை செலுத்தியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தொடர்ந்து, ரத்தன் டாடா உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ரத்தன் டாடா இறுதி ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்றனர்.