பி.எம் இன்டர்ன்ஷிப் திட்டம் : விண்ணப்பிப்பது எப்படி? சிறப்பு கட்டுரை!
Oct 6, 2025, 11:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பி.எம் இன்டர்ன்ஷிப் திட்டம் : விண்ணப்பிப்பது எப்படி? சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 12, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத் தொகையுடன் கூடிய பி.எம் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பயன்பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிப்பது எப்படி ? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்கு பிரதமர் மோடி தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறார்.

புதியதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கான முதல் மாத ஊதியம், ஒருகோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் மூலம் கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில் மட்டும் 8 கோடிக்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போதைய அரசின் மூன்றாவது பதவிக் காலத்தின் முதல் நூறு நாட்களில் மட்டும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளால் அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைக்கவும், இளைஞர்களுக்கு வேலைக்கான பயிற்சியை வழங்கும் விதமாக மத்திய அரசால் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் திட்டம் தான் பி.எம். இண்டர்ன்ஷிப் திட்டம்.

நாடு முழுவதும் உள்ள 500 முன்னணி நிறுவனங்களை தேர்வு செய்து மாதம் ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கும் இத்திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. பி.எம். இண்டர்ன்ஷிப் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் நிதியை முதற்கட்டமாக ஒதுக்கிய மத்திய அரசு, அத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

21 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வேறு எந்த நிறுவனத்திலும் முழு நேர ஊழியராக இருக்கக் கூடாது, குடும்பத்தில் யாரேனும் அரசு ஊழியராக இருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது, குடும்பத்தின் ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாயை தாண்டக் கூடாது உள்ளிட்ட சில விவரங்களும் தகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தகுதியுடையவர்கள் https://pminternship.mca.gov.in/login/ பி.எம். இடர்ன்ஷிப் எனும் இணையதளப் பக்கத்திற்கு சென்று தங்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அடுத்த மாதம் 27 ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்து தேர்வு செய்யப்படும் இளைஞர்களின் பெயர்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதோடு. டிசம்பர் 2 ஆம் தேதி முதல் பயிற்சிகள் தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாயுடன் கூடிய 12 மாத வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும். இதன் மூலம் ஒவ்வொரு இளைஞரும் ஆண்டிற்கு 60 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 மாத பயிற்சியின் போது சம்பந்தப்பட்ட தொழில் சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்படுவதால் இளைஞர்கள் எளிதில் வேலைவாய்ப்பை பெறக்கூடிய சூழல் உருவாகும். பிரதமர் மோடியின் இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இந்த பயிற்சியை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக 60 ஆயிரம் ரூபாய் கோடி நிதியும் ஒதுக்கப்படும் என அறிவித்துள்ள மத்திய அரசு, இந்த பொன்னான வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

Tags: central governmentyouth!PM internship programskill development
ShareTweetSendShare
Previous Post

புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை – ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Next Post

அமெரிக்காவை புரட்டிப் போட்ட ‘மில்டன்’ புயல் – சிறப்பு கட்டுரை!

Related News

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

தமிழ் ஜனம் டிவியை தடை செய்ய திமுக அரசுக்கு எந்த அருகதையும் இல்லை : கே.பி.ராமலிங்கம்

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

சரணாலயம் அமைக்கிறோம் என்ற பெயரில் பழங்குடியின மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது – பிருந்தா காரத்

திமுக அரசு மீது சந்தேகம் எழுகிறது : எடப்பாடி பழனிசாமி

சென்னை திரும்பிய மக்களால் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்ட தங்கம், வெள்ளியின் விலை!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies