திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவத்தின் நிறைவு நாளையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.
ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரமோற்சவ விழா அக்டோபர் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் விழாவின் இறுதி நாளையொட்டி கோவில் குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக, கோயில் முக மண்டபத்தில் உற்சவர்களுக்கும், சக்கரத்தாழ்வாருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாரை 3 முறை மூழ்கச் செய்து தீர்த்தவாரி வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த நிகழ்வினை கண்டு ரசித்த லட்சக்கணக்கான பக்தர்கள் குளத்தில் புனித நீராடினர்.