திருப்பதி ஏழுமலையானுக்கு இசை தொண்டு : நெகிழ வைக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் - சிறப்பு கட்டுரை!
Jul 27, 2025, 03:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையானுக்கு இசை தொண்டு : நெகிழ வைக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Oct 13, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி ஏழுமலையானுக்கு 29 ஆண்டுகளாக இஸ்லாமிய சகோதரர்கள் இசையின் மூலம் தொண்டு செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த சகோதரர்கள்…? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையான திவ்ய தேசமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கத்தில் காசிம் மற்றும் பாபு ஆகிய இரு இஸ்லாமிய சகோதரர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இருவரும் தங்களுடைய நாதஸ்வரம் வாசிப்பு திறமைக்காக பல்வேறு விருதுகளை பெற்றதோடு திருப்பதி ஏழுமலையானுக்கும் இசையின் மூலம் தொண்டு செய்து வருகின்றனர்.

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் கரவாடி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட காசிம்- பாபு சகோதரர்கள் தற்போது ஸ்ரீரங்கத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய தாத்தா பத்மஸ்ரீ ஷேக் சின்ன மௌலானா. மிகச் சிறந்த நாதஸ்வர இசை கலைஞரான இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

இந்த நிலையில்தான் இவரது பேரன்களான காசிம்- பாபு சகோதரர்கள் 29 ஆண்டுகளுக்கு முன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான்களாக நியமிக்கப்பட்டனர். அந்தப் பணியை தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதி தொடர்ந்து ஏழுமலையானுக்கு இசை சேவை செய்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் ஆகிய கோயில்களில் பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் போது இறைவன் முன் நாதஸ்வரம் வாசிக்கும் வாய்ப்பை தேவஸ்தானத்திடம் இருந்து காசிம் – பாபு சகோதரர்கள் பெற்றுள்ளனர். ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், சிருங்கேரி சங்கர மடம், காஞ்சி காமகோடி மடம் ஆகியவற்றிற்கும் ஆஸ்தான வித்வான்களாக இருந்து வருகின்றனர்.

தங்களுடைய ஏழாவது வயது முதல் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக்கொண்டதாகக் கூறும் காசிம்- பாபு சகோதரர்கள் 17-வது வயதில் இருந்து பொது மேடைகளில் நாதஸ்வரம் வாசித்து வருவதாகவும் இசையில் ஆர்வம் கொண்டுள்ள ஆண், பெண் ஆகியோருக்கு இலவசமாக இசை பயிற்சி அளித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இன, மத வேறுபாடின்றி திருப்பதி ஏழுமலையானை பலரும் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமிய சகோதர்கள் இருவர் இசையின் மூலம் ஏழுமலையானுக்கு பல வருடங்களாக தொண்டாற்றி வருவது பக்தர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: nathswaram misilim brothersMuslim brothers musiceTirupati Yehumalayan.Kasim Babu brothers108 Divya Desams.
ShareTweetSendShare
Previous Post

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – தயார் நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்!

Next Post

மேற்கு வங்கத்தில் விஜயதசமியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்கா சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies