திருப்பதி ஏழுமலையானுக்கு இசை தொண்டு : நெகிழ வைக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையானுக்கு இசை தொண்டு : நெகிழ வைக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Oct 13, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பதி ஏழுமலையானுக்கு 29 ஆண்டுகளாக இஸ்லாமிய சகோதரர்கள் இசையின் மூலம் தொண்டு செய்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த சகோதரர்கள்…? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.

108 திவ்ய தேசங்களில் முதன்மையான திவ்ய தேசமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கத்தில் காசிம் மற்றும் பாபு ஆகிய இரு இஸ்லாமிய சகோதரர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இருவரும் தங்களுடைய நாதஸ்வரம் வாசிப்பு திறமைக்காக பல்வேறு விருதுகளை பெற்றதோடு திருப்பதி ஏழுமலையானுக்கும் இசையின் மூலம் தொண்டு செய்து வருகின்றனர்.

ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் கரவாடி கிராமத்தை பூர்வீகமாக கொண்ட காசிம்- பாபு சகோதரர்கள் தற்போது ஸ்ரீரங்கத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுடைய தாத்தா பத்மஸ்ரீ ஷேக் சின்ன மௌலானா. மிகச் சிறந்த நாதஸ்வர இசை கலைஞரான இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

இந்த நிலையில்தான் இவரது பேரன்களான காசிம்- பாபு சகோதரர்கள் 29 ஆண்டுகளுக்கு முன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான்களாக நியமிக்கப்பட்டனர். அந்தப் பணியை தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாக கருதி தொடர்ந்து ஏழுமலையானுக்கு இசை சேவை செய்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் ஆகிய கோயில்களில் பிரம்மோற்சவம், ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் போது இறைவன் முன் நாதஸ்வரம் வாசிக்கும் வாய்ப்பை தேவஸ்தானத்திடம் இருந்து காசிம் – பாபு சகோதரர்கள் பெற்றுள்ளனர். ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், சிருங்கேரி சங்கர மடம், காஞ்சி காமகோடி மடம் ஆகியவற்றிற்கும் ஆஸ்தான வித்வான்களாக இருந்து வருகின்றனர்.

தங்களுடைய ஏழாவது வயது முதல் நாதஸ்வரம் வாசிக்க கற்றுக்கொண்டதாகக் கூறும் காசிம்- பாபு சகோதரர்கள் 17-வது வயதில் இருந்து பொது மேடைகளில் நாதஸ்வரம் வாசித்து வருவதாகவும் இசையில் ஆர்வம் கொண்டுள்ள ஆண், பெண் ஆகியோருக்கு இலவசமாக இசை பயிற்சி அளித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இன, மத வேறுபாடின்றி திருப்பதி ஏழுமலையானை பலரும் வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இஸ்லாமிய சகோதர்கள் இருவர் இசையின் மூலம் ஏழுமலையானுக்கு பல வருடங்களாக தொண்டாற்றி வருவது பக்தர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Muslim brothers musiceTirupati Yehumalayan.Kasim Babu brothers108 Divya Desams.nathswaram misilim brothers
ShareTweetSendShare
Previous Post

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – தயார் நிலையில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள்!

Next Post

மேற்கு வங்கத்தில் விஜயதசமியை முன்னிட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட துர்கா சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies