சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும், வரும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்து 24 மணி நேரத்தில் தஞ்சை, திருவாரூர், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, ஈரோடு, சேலம், நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மேலும், 15 மற்றும் 16ஆம் தேதிகளில் வட கிழக்கு பருவமழை தொடங்கும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.