சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, மனு குறித்து சித்ராவின் கணவர் ஹேம்நாத் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.