ஐதராபாத்தில் அம்மன் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத் நம்பபள்ளி கண்காட்சி மைதானத்தில் பிரமாண்ட துர்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்து நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜைகள் முடிந்து விழா குழுவினர் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர்.
அந்த நேரத்தில் மர்மநபரால் சிலையின் சில பாகங்கள் உடைக்கப்பட்டன. இதனைக்கண்டித்து விழாக்குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலை உடைப்பு தொடர்பு ஒருவரை கைதுசெய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.