துரோகம், தியாகத்தை பற்றி பேசுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய நிலை நீடித்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுகவால் ஆட்சியமைக்க முடியாது என்றும், அதிமுகவின் வாக்கு சதவிகிதம் குறைந்து கொண்டே போகும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக வீறுகொண்டு எழ வேண்டுமென்றால் பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும்,
பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டுமென்றால் பண்புள்ளவர்கள் தலைமை பதவிக்கு வரவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி அதிமுகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைக்க உறுதியேற்போம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.