ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் செக்டார் சூரன்கோட் அருகே பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை ராணுவ வீரர்கள் கைது செய்தனர்.
அவரிடமிருந்து நான்கு கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பூஞ்ச் செக்டாரில் அண்மையில் நடைபெற்ற கையெறி குண்டுகள் தாக்குதல் சம்பவத்தில், அந்த நபருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக ராணுவம் தெரிவித்தது.