தமிழக உயர் கல்வி துறையில் நான்காயிரம் பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் அரசினர் கலை கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், அங்கு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஊதியம் வழங்க வேண்டி நடைபெறும் ஆசிரியர்களின் போராட்டம் மற்றும் பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் எனக் கூறினார். இதேபோல, தமிழக உயர் கல்வித்துறையில் எங்கெங்கு பிரச்சினைகள் இருக்கிறதோ அவற்றை களைவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.